search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    கோவில்பட்டியில் மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

    கோவில்பட்டியில் மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). இவர் மின் வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். முருகேசனுக்கு சர்க்கரை வியாதி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்றிரவு வீட்டின் மாடியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×