என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் பிரபல ரவுடி படுகொலை
Byமாலை மலர்8 Jun 2019 4:25 PM GMT (Updated: 8 Jun 2019 4:25 PM GMT)
பெரம்பலூரில் பிரபல ரவுடியை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கம்பன் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள ஒரு மரத்தின் அருகே மது குடிப்பது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் அங்கு சென்று மது குடித்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பாட்டிலால் நாகராஜை அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் நாகராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பெரம்பலூர் எஸ்.பி. திஷா மித்தல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர் நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X