search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளகோவிலில் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை
    X

    வெள்ளகோவிலில் வாலிபர் தற்கொலை- போலீசார் விசாரணை

    வெள்ளகோவிலில் சமையல் அறையில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ராஜூவ் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் அய்யப்பன் (19) கூலி தொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தந்தை வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×