search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் வாலிபர் மர்ம மரணம்
    X

    மாமல்லபுரத்தில் வாலிபர் மர்ம மரணம்

    மாமல்லபுரத்தில் வாலிபர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லப்புரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த ஓரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சீனிவாசன் (வயது35). கூலித்தொழிலாளி.

    நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சீனிவாசன் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோல் கார் நிறுத்தும் இடம் அருகே சீனிவாசன் மர்மமாக இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சீனிவாசனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    சீனிவாசன் எதற்காக இங்கு வந்தார்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×