என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காங்கயத்தில் மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை விபத்தில் பலி
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் நல்லசேனாபதி (வயது 55). இவர் காங்கயம் கோவை ரோட்டில் எலட்ரிக்கடை நடத்தி வந்தார்.
இவரது மனைவி பரிமளம் (47). இவர் காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர்.
நேற்று வெள்ள கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு திருமண அழைப்பிழை கொடுக்க காரில் வந்தனர். திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு காங்கயதுக்கு புறப்பட்டனர்.
கார் அங்குள்ள ஓலப் பாளையத்தில் வந்தபோது அந்த வழியே லாரி வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் காரும், லாரியும் மோதின. இதில் படுகாயம் அடைந்த நல்லசேனாபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஆசிரியை பரிமளத்தை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நல்லசேனாபதியின் உடல் இன்று காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்