search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர், வீரவநல்லூரில் விபத்தில் சிக்கிய 2 பேர் பலி
    X

    திருச்செந்தூர், வீரவநல்லூரில் விபத்தில் சிக்கிய 2 பேர் பலி

    திருச்செந்தூர் மற்றும் வீரவநல்லூரில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    திருச்செந்தூர் அருகே உள்ள குமாரசாமிபுரத்தை சேர்ந்தவர் கன்னியராஜ் (வயது46). இவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு  சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெபமணி (65). விவசாயி. இவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல்  இன்று காலை ஜெபமணி பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×