என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை- பணம் திருட்டு
Byமாலை மலர்5 Jun 2019 6:23 PM GMT (Updated: 5 Jun 2019 6:23 PM GMT)
ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முசிறி:
முசிறி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆண்டி(வயது 67). ரெயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 31-ந்தேதி தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இவருடைய வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இது குறித்து அக்கம், பக்கத்தினர் சென்னையில் இருந்த ஆண்டிக்கு போனில் தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஆண்டி முசிறி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனடியாக ஆண்டியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. இந்நிலையில் முசிறிக்கு திரும்பிய ஆண்டி வீட்டிற்கு சென்று பார்த்தபோது 7 பவுன் நகைகளும், ரூ.15 ஆயிரமும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆண்டி, முசிறி போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முசிறி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆண்டி(வயது 67). ரெயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 31-ந்தேதி தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இவருடைய வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இது குறித்து அக்கம், பக்கத்தினர் சென்னையில் இருந்த ஆண்டிக்கு போனில் தகவல் தெரிவித்தனர். இது குறித்து ஆண்டி முசிறி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனடியாக ஆண்டியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. இந்நிலையில் முசிறிக்கு திரும்பிய ஆண்டி வீட்டிற்கு சென்று பார்த்தபோது 7 பவுன் நகைகளும், ரூ.15 ஆயிரமும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆண்டி, முசிறி போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X