என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் நகை - பணம் கொள்ளை
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (41). இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 1-ந் தேதி பிரபாகரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நேற்று இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் தங்க, வைர நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்றனர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தனர். பனியன் கம்பெனி அதிபர் பிரபாகரன் வசிக்கும் வீடு அடுக்கு மாடி குடியிருப்பு ஆகும். அங்கு வெளி நபர்கள் எளிதில் நுழைய முடியாது. எனவே பிரபாகரன் ஊருக்கு செல்வதை அறிந்த அவருக்கு தெரிந்தவர்கள் யாராவது தான் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்