என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடவாசலில் இளம்பெண் சாவில் மர்மம் - போலீசில் புகார்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவரது மனைவி வினோதினி (27). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குவைத்தில் வேலை பார்த்து வந்த வினோத் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து வினோத் குமார் குடும்பத்தினருடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். இதைத் தொடர்ந்து வினோதினி சமையல் அறைக்கு சென்று பால் காய்ச்சினார். அப்போது கியாஸ் கசிவு காரணமாக அவர் மீது தீப்பற்றியது. இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக வினோதினியின் அண்ணன் விசுவநாதன், குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதில் தனது தங்கை வினோதினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மாமனார் குறை கூறி வந்ததால் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் எனவே வினோதினி சாவில் மர்மம் இருப்பதாகவும் அதுதொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவர் கொடுத்த புகாரின்பேரில் டி.எஸ்.பி. முத்தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குடவாசலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்