search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நிம்மதி அளிக்கிறது- டாக்டர் ராமதாஸ் கருத்து
    X

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நிம்மதி அளிக்கிறது- டாக்டர் ராமதாஸ் கருத்து

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியிருப்பது நிம்மதி அளிக்கிறது என்று ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    தேசிய கல்வி கொள்கையில் இந்தி பாடம் கட்டாயம் என்ற பரிந்துரை திரும்ப பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பா.ம.க.வுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும்.

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியிருப்பது நிம்மதி அளிக்கிறது. இந்த திட்டத்தால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவசமும், காவலனும் பா.ம.க. தான் என்பதை மக்கள் உணர்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×