search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க காஞ்சிபுரம் ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிதண்ணீர்
    X

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க காஞ்சிபுரம் ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிதண்ணீர்

    குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி தண்ணீரை எடுத்து சென்னைக்கு சப்ளை செய்ய மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    காஞ்சிபுரம்:

    சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு விட்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    தினந்தோறும் மக்கள் தண்ணீருக்காக தவித்து வருகிறார்கள். காலி குடங்களுடன் தண்ணீர் லாரிகளுக்காக இரவு, பகல் பாராமல் காத்து கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.

    தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று நீர், கல்குவாரி நீரை எடுத்து குடிநீர் வாரிய அதிகாரிகள் சப்ளை செய்து வருகிறார்கள்.

    ஆனால் இது போதுமானதாக இல்லை. சென்னை நகர மக்களின் பாதியளவு குடிநீர் தேவையை மட்டும் பூர்த்தி செய்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் வீராணம் ஏரி தண்ணீர் மட்டுமே கை கொடுத்து வருகிறது

    இந்த நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மற்ற ஏரி தண்ணீரை எடுத்து சென்னைக்கு சப்ளை செய்ய மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், தென்னேரி உள்பட 5 ஏரிகளை அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளனர்.

    இந்த ஏரிகளில் குழாய்கள் பதித்து தண்ணீரை எடுக்க திட்டமிடப்பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே ரெட்டேரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×