search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடியில் கடையை உடைத்து பணம் கொள்ளை
    X

    போடியில் கடையை உடைத்து பணம் கொள்ளை

    போடியில் பஞ்சு கடையை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் தாகுல்சிங்(வயது59). இவர் டி.வி.கே.கே.நகர் பகுதியில் பஞ்சு கமிசன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றுள்ளார். நள்ளிரவு சமயத்தில் உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். கல்லாவில் இருந்த ரூ.50,000த்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

    மறுநாள் காலை தாகுல்சிங் கடைக்கு வந்து பார்த்தபோது பணம் கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின்பறிப்பது, கடைகளை உடைத்து பணம் கொள்ளையடிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×