என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
Byமாலை மலர்26 May 2019 10:56 PM GMT (Updated: 26 May 2019 10:56 PM GMT)
ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை:
தேனி பாராளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. திருஷ்டி பரிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக, என்னவோ? நான் தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன்.
என்னுடைய தோல்வி உருவாக்கப்பட்டது. மக்கள் ஓட்டு போடாமல் ஏற்பட்ட தோல்வி அல்ல. அதிகார பலம், பணம் பலம் இருந்தும் கூட தேனி தொகுதியில் 4.5 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிட தேனி தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவம் கொடுத்து தில்லுமுல்லுகளை செய்திருக்கிறது. பணம் மழையாக இல்லை, சுனாமியாக கொட்டி இருக்கிறது.
தேனி தொகுதியில் எப்படியாவது ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருந்தார். தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் மீது இல்லாத காதல், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மீது மட்டும் மோடிக்கு இருந்தது ஏன்? என்று தெரியவில்லை. தில்லுமுல்லுகள் செய்தாலும் கூட தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் நான் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறேன்.
தேனி தொகுதியில் தில்லுமுல்லுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். தேனி தொகுதியில் வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று வழக்கில் குறிப்பிடுவேன். வாக்குப்பதிவு எந்திரங்களை விட வாக்குச்சீட்டு முறை தான் சிறந்தது என்று நாங்கள் வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் அமைந்தது போல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காததே மோடி வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. ராகுல்காந்தி தான் பிரதமராக வருவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது போன்று வடமாநிலங்களில் மற்ற கட்சி தலைவர்கள் அறிவிக்காதது தான் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணமாக அமைந்தது.
தமிழக, கேரள மக்கள் போன்று வடமாநில மக்கள் விவரம் உள்ளவர்களாக இல்லை. மோடியின் பொய் பிரசாரங்களை நம்பி, மயங்கி இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் தெளிவு பெறும் போது, அங்கே பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும்.
டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு தன்னை மிகப்பெரிய சக்தியாக வெளியே காட்டிக் கொள்ள முயன்றார். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை அவர் கட்சி பெயரை ‘அப்பா தி.மு.க.’ என்று மாற்றிக்கொண்டால் ஏதாவது, எதிர்க்காலம் இருக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோபண்ணா, சிவராமன், ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தது ஏன்? என்பது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. திருஷ்டி பரிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக, என்னவோ? நான் தேனி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன்.
என்னுடைய தோல்வி உருவாக்கப்பட்டது. மக்கள் ஓட்டு போடாமல் ஏற்பட்ட தோல்வி அல்ல. அதிகார பலம், பணம் பலம் இருந்தும் கூட தேனி தொகுதியில் 4.5 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் போட்டியிட தேனி தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவம் கொடுத்து தில்லுமுல்லுகளை செய்திருக்கிறது. பணம் மழையாக இல்லை, சுனாமியாக கொட்டி இருக்கிறது.
தேனி தொகுதியில் எப்படியாவது ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருந்தார். தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் மீது இல்லாத காதல், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மீது மட்டும் மோடிக்கு இருந்தது ஏன்? என்று தெரியவில்லை. தில்லுமுல்லுகள் செய்தாலும் கூட தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் நான் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறேன்.
தேனி தொகுதியில் தில்லுமுல்லுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றியை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். தேனி தொகுதியில் வி.வி.பேட் எந்திரத்தில் பதிவான ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று வழக்கில் குறிப்பிடுவேன். வாக்குப்பதிவு எந்திரங்களை விட வாக்குச்சீட்டு முறை தான் சிறந்தது என்று நாங்கள் வலியுறுத்துவோம்.
தமிழகத்தில் அமைந்தது போல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காததே மோடி வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. ராகுல்காந்தி தான் பிரதமராக வருவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது போன்று வடமாநிலங்களில் மற்ற கட்சி தலைவர்கள் அறிவிக்காதது தான் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணமாக அமைந்தது.
தமிழக, கேரள மக்கள் போன்று வடமாநில மக்கள் விவரம் உள்ளவர்களாக இல்லை. மோடியின் பொய் பிரசாரங்களை நம்பி, மயங்கி இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் தெளிவு பெறும் போது, அங்கே பா.ஜ.க. தோல்வியை சந்திக்கும்.
டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு தன்னை மிகப்பெரிய சக்தியாக வெளியே காட்டிக் கொள்ள முயன்றார். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை அவர் கட்சி பெயரை ‘அப்பா தி.மு.க.’ என்று மாற்றிக்கொண்டால் ஏதாவது, எதிர்க்காலம் இருக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோபண்ணா, சிவராமன், ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X