என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வறட்சியால் பாதித்த தென்னை வேரோடு வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பும் விவசாயிகள்
வடமதுரை, மே. 25-
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த வருடம் கஜா புயலால் இப்பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிக்கப்பட்டன.
இப்பகுதியில் அதிகா ரிகள் பார்வையிட்டு சேத மடைந்த தென்னையை ஓரளவுக்கு கணக்கிட்டு சென்றனர். ஆனால் பல விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எதிர்பார்த்த பருவ மழையும் பெய்யாததால் தென்னை மரங்கள் பட்டுப் போய் கருகத் தொடங்கியது.
இதனால் காய்ந்த மரங்களை விவசாயிகள் வேரோடு வெட்டி செங்கல் சூளைக்கு அனுப்பி வருகின்றனர். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. சூளை உரிமையாளர்கள் நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெட்டி விறகுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
ரூ. 50 முதல் ரூ.100 வரை விலை கொடுத்து இவை வாங்கிச் செல்லப்படுகிறது. நீண்ட நாள் பலன் தரக்கூடியது என்று நம்பி தென்னையை பயிரிட்ட விவசாயிகள் தற்போது கண்ணீர் வடித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்