search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா அறிவாலயத்தில் நாளை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம்
    X

    அண்ணா அறிவாலயத்தில் நாளை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. புதிய எம்.பி.க்கள் கூட்டம்

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. புதிய எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க. கூட்டணி மொத்தம் பதிவான வாக்குகளில் 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்) வாக்குகளை பெற்றது.

    வெற்றி பெற்றவர்களில் சில எம்.பி.க்கள் சென்னையில் இன்று தி.மு.க. புதிய தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



    இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணியளவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×