search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேர் கைது
    X

    டாஸ்மாக் விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேர் கைது

    நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் விடுமுறை முன்னிட்டு கூடுதல் விலைக்கு மதுபானம் விற்க முயன்ற 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 68 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    நாடு முழுவதும் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பானங்களை வாங்கி விற்பனை செய்ய முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து பெரிய நாயக்கன்பாளையம், பேரூர், தொண்டாமுதூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் மதுபானங்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த பூமிநாதன் (38), மதுக்கரை ராமலிங்கம் (34), நீலாம்பூர் குமார் (26), பெரிய நாயக்கன் பாளையம் தமிழரசன் (27), செம்மேடு மந்திரப்பன் (67) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 68 பாட்டில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×