search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 306 பேர்
    X

    பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 306 பேர்

    பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 நபர்கள் ஈடுபட உள்ளனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர், தமிழக சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவ்வாக்கு எண்ணும் பணிகளில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என 306 நபர்கள் ஈடுபட உள்ளனர்.

    பதிவான வாக்குகள் அனைத்தும் 14 எண்ணிக்கையிலான மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. அதன்படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 24 சுற்றுகளாகவும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், லால்குடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 18 சுற்றுகளாகவும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும், முசிறி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 19 சுற்றுகளாகவும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் 20 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×