search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
    X

    கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது

    கும்பகோணத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், ஆண்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சாந்தாராமன் மகன் பிரவீன் (27). இவர் கடந்த 14-ந்தேதி வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த 14 ந்தேதி மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இதே போல் கும்பகோணம், செம்போடையை சேர்ந்தவர் ஞானசம்பந்தம் மகன் வைரவேந்தன் (26), இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார் கடந்த 14 ந்தேதி இரவு மர்ம நபர்கள் அதனை திருடி சென்றனர்.

    இது குறித்து பிரவீன் மற்றும் வைரவேந்தன் ஆகியோர் மேற்கு போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, தாராசுரம், எலுமிச்சங்கா பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் தீனதயாளன் (28), மாரி முத்து மகன் தாமோதரன் (24) மற்றும் மதுக்கூர், ராமானந்தபுரத்தை சேர்ந்த ரவி மகன் சிவபாரதி (20) ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×