search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புள்ளம்பாடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    புள்ளம்பாடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    புள்ளம்பாடியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சியில் கடை மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையில் அலுவலர்கள் களஆய்வு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடைகளில் விதி முறைகள் மீறிபயன் படுத்திய  5 கிலோபிளாஸ்டிக் பைகளை கைப்பற்றினார்கள்.மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.1300 அபராதம் விதித்தனர்.

    இந்த சோதனையில் இளநிலை அலுவலர் குமார், வரிதண்டலர்  பாஸ்கர் சுகாதார பரப்புரையாளர்கள், பணியாளர்கள்  ஈடுபட்டனர்.

    Next Story
    ×