என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் துப்புரவு தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது45). துப்புரவு தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது உறவினருடன் நாகல்நகர் பகுதிக்கு வந்தார். பின்பு அவர் தனியாக வீட்டுக்கு திரும்பினார். நாகல்நகர் அரண்மனைக்குளம் அருகே சென்றபோது ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 2 பேர் திடீரென ஆறுமுகத்தை கத்தியால் குத்தினர்.
இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
ஆறுமுகம் கொலைக்கு காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மது குடிக்கும் தகராறில் நண்பர்களே ஆறுமுகத்தை கொலை செய்தது தெரிய வந்தது. ஆறுமுகத்தின் நண்பர்கள் காளிதாஸ், மாரியப்பன். இவர்களும் ஆறுமுகத்துடன் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மதுக்கடை பார்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் 3 பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று இது போல் பிளாஸ்டிக் கழிவுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து மது குடித்தனர். அப்போது காளிதாஸ் ஆறுமுகத்திடம் ரூ.20 பணம் கேட்டார். அதற்கு ஆறுமுகம் மறுத்தாராம். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் மதுக்கடை பாரில் வைத்து கைகலப்பில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். எனினும் காளிதாசுக்கு ஆத்திரம் தீரவில்லை.
இந்நிலையில் பாரை விட்டு வெளியே வந்ததும் ஆறுமுகம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது காளிதாசும் மாரியப்பனும் வந்து ஆறுமுகத்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து காளிதாஸ், மாரியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ரூ.20 பணம் கேட்டதற்கு ஆறுமுகம் தர மறுத்து தங்களை தாக்கியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்