search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்தங்கரை அருகே மினிலாரி மோதி விவசாயி பலி
    X

    ஊத்தங்கரை அருகே மினிலாரி மோதி விவசாயி பலி

    ஊத்தங்கரை அருகே சாலையில் நடந்த சென்ற விவசாயி மீது மினிலாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள காட்டேரி பகுதியை சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது55). விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம் காட்டேரி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது. 

    தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக கண்ணாயிரம் அரூர்-ஊத்தங்கரை செல்லும் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக கண்ணாயிரம் மீது மோதி யது. இதில் தூக்கி வீசப்பட்ட  கண்ணாயிரத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங் கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே கண்ணாயிரம் பரிதாபமாக உயிரிழந்தார். 

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோத னைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×