என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானாமதுரை அருகே கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு
Byமாலை மலர்16 May 2019 6:00 PM GMT (Updated: 16 May 2019 6:00 PM GMT)
மானாமதுரை அருகே கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மானாமதுரை:
மானாமதுரை அருகே அரசகுளம் கிராமத்தில் உள்ள திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்துகொண்ட காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவை முறையாக பதிவு செய்யப்பட்டது.
போட்டியை சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்துகொண்ட காளைகளை அடக்க 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். பல காளைகள் அவர்களிடம் தப்பித்து வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பித்தளை அண்டா, பானை, சில்வர் அண்டா-பானை, கட்டில், ஆட்டுக்குட்டி, ரொக்கப் பணம், தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியாண்டி தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் அகர்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே அரசகுளம் கிராமத்தில் உள்ள திருவேட்டை அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்துகொண்ட காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவை முறையாக பதிவு செய்யப்பட்டது.
போட்டியை சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்துகொண்ட காளைகளை அடக்க 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். பல காளைகள் அவர்களிடம் தப்பித்து வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பித்தளை அண்டா, பானை, சில்வர் அண்டா-பானை, கட்டில், ஆட்டுக்குட்டி, ரொக்கப் பணம், தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனியாண்டி தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மானாமதுரை தாசில்தார் யாஸ்மின் அகர்பால், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X