என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாமல்பட்டி அருகே இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
Byமாலை மலர்16 May 2019 5:20 PM GMT (Updated: 16 May 2019 5:20 PM GMT)
சாமல்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டிய அவரை கைது செய்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரு கிறார். இவரது மகள் பிரியங்கா (வயது22). இவருக்கும் ஊத்தங்கரை அடுத்துள்ள சாமல்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார்.
கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் பிரியங்காவிடம் கூடுதலாக உங்கள் வீட்டில் இருந்து நகை வாங்கி கொண்டு வரவேண்டும் என்று கார்த்திக் கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு நடந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியங்கா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8-ந்தேதி அன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டியதின் பேரில் கார்த்திக் மீது வழக்குபதிவு செய்து போலீசார் கடந்த 5-ந்தேதி அன்று கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X