என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்கல் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்15 May 2019 6:54 AM GMT (Updated: 15 May 2019 6:54 AM GMT)
வெங்கல் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஏரியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளுவதாக வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலுக்கு தகவல் கிடைத்தது.
அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது வாகன பதிவு எண் இல்லாத டிராக்டரில் மணல் கடத்தி வந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் மேலகொண்டயார் கிராமம் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணிக்கம், டிராக்டர் உரிமையாளர் கார்லப் பாக்கம் கிராமம் வள்ளலார் தெருவைச் சேர்ந்த துரை என்பது தெரியவந்தது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X