search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்- அதிமுக புகார் மனு
    X

    டிடிவி தினகரன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்- அதிமுக புகார் மனு

    டி.டி.வி. தினகரன் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் தமிழக தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

    முதலமைச்சரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும்,  பல்வேறு விவகாரங்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தும், அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டி.டி.வி. தினகரன் செயல்படுகிறார்.



    டி.டி.வி. தினகரன் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படியும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுத்து, அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வதறகு தடை விதித்து உத்தரவு பிறக்க வேண்டும்.

    இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×