என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மனைவி பிரிந்து சென்றதால் வேதனை - உடலில் மின்சாரம் பாய்ச்சி வாலிபர் தற்கொலை
திருவொற்றியூர்:
மணலி, திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது26). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வசந்தி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் கோபால் மனவேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோபாலின் வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. இன்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மணலி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது அங்குள்ள அறையில் கோபால் இறந்து கிடந்தார்.
அவரது உடலில் மின் வயர்கள் சுற்றப்பட்டு இருந்தது. மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அவர் தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்