
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் 3வது அணி உருவாக்க தமிழகம் வரவில்லை. அவர் ஆலயங்களை வழிபட வந்தார். அவருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

சந்திர சேகரராவ் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழிசை சொல்லி இருக்கிறார். அவர் வருகை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, என்று தமிழிசை கூறியதில் ‘ க்’கை எடுத்துவிடுங்கள். அது தாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.