search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை - தூக்கில் தொங்கினார்
    X

    காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை - தூக்கில் தொங்கினார்

    கோபி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கவுரி சங்கர் (வயது 27). இவரது மனைவி பெயர் ஞானசுந்தரி. காதல் திருமண தம்பதியினர்.

    இவர்களுக்கு மவுலீஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த கவுரி சங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×