என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மன்னார்குடி அருகே விபத்தில் விவசாயி பலி - வேனை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே உள்ள சிறுமங்கலம் உடையார் தெருவை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 55) விவசாயி.
இவர் இன்று காலை தனது சைக்கிளில் அருகே உள்ள மேலவாசலுக்கு சென்றார். அங்கு மார்க்கெட்டில் மீன் வாங்கி விட்டு வீட்டுக்கு சைக்கிளில் புறப்பட்டார். சிறுமங்கலம் அருகே தஞ்சை-மன்னார்குடி சாலையில் வந்தபோது பின்னால் வந்த வேன் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்துக்கு காரணமான வேனை அடித்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். தகவல் அறிந்து வந்த வடுவூர் போலீசார் ராஜவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்