என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே வெயில் கொடுமையால் மூதாட்டி பலி
ஊத்துக்கோட்டை:
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.
இதேபோல் ஊத்துக்கோட்டை பகுதியிலும் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் வெப்பத்தின் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே வெயிலின் கொடுமையால் மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா. இவரது மனைவி செங்கம்மாள் (வயது 70). நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் அல்லிகுழியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது வெயில் கொடுமை தாங்காமல் சாலையில் சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கம்மாள் இறந்தார். இது குறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்