search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே வெயில் கொடுமையால் மூதாட்டி பலி
    X

    ஊத்துக்கோட்டை அருகே வெயில் கொடுமையால் மூதாட்டி பலி

    ஊத்துக்கோட்டை அருகே வெயில் கொடுமையால் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.

    இதேபோல் ஊத்துக்கோட்டை பகுதியிலும் வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் வெப்பத்தின் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே வெயிலின் கொடுமையால் மூதாட்டி ஒருவர் பலியாகி உள்ளார். ஊத்துக்கோட்டை அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா. இவரது மனைவி செங்கம்மாள் (வயது 70). நேற்று சுட்டெரிக்கும் வெயிலில் அல்லிகுழியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது வெயில் கொடுமை தாங்காமல் சாலையில் சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கம்மாள் இறந்தார். இது குறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×