search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி
    X

    சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

    சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டை சேர்ந்தவர் முகமது இப்ராகிம்(வயது 53). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆடுதுறை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் அத்தியூருக்கு சவாரி சென்று விட்டு ஆடுதுறை அருகே முகமது இப்ராகிம் ஆட்டோவில் வந்தார். அப்போது திடீரென சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.

    இதில் ஆட்டோவில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே முகமது இப்ராகிம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முகமது இப்ராகிமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×