search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    வில்லியனூர் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை

    வில்லியனூர் அருகே இன்று காலை பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். தச்சுதொழிலாளி. இவரது மனைவி சந்திரா (வயது55). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக சந்திரா இரத்த அழுத்த நோய் மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் முற்றிலும் குணமாகவில்லை. இதனால் சந்திரா விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை சந்திராவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்திரா வீட்டின் படுக்கை அறையில் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு திருவரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×