search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயம்

    பொன்னேரி அருகே கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    பொன்னேரியை அடுத்த மாலிவாக்கத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் நந்தினி (19). ரெட்ஹில்ஸ் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்ப வில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நந்தினியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×