search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்- முக ஸ்டாலின்
    X

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்- முக ஸ்டாலின்

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #mkstalin #perarivalan
    சென்னை:

    திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தினால் இட்டுக்கட்டிய பிரச்னைகள் எழக்கூடும். 7 பேரையும் விடுவிக்கும் அமைச்சரவை தீர்மானம் மீது 8 மாதங்களாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இனி ஆளுநருக்கு எந்த தடையும் இல்லை, வேறு எந்த காரணத்தையும் சொல்ல வழியும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  #mkstalin #perarivalan 
    Next Story
    ×