search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் மிளகு வியாபாரியிடம் ரூ. 9 லட்சம் மோசடி
    X

    மதுரையில் மிளகு வியாபாரியிடம் ரூ. 9 லட்சம் மோசடி

    மிளகு வியாபாரியிடம் ரூ. 9 லட்சம் மோசடி செய்ததாக வடமாநில வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா, அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவர் பலசரக்கு சாமான்களை மொத்த கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரைச் சேர்ந்த சர்மா என்பவர் அருணாசலத்திடம் தனக்கு 2 ஆயிரத்து 310 கிலோ மிளகு வேண்டும் என கேட்டுள்ளார். அவரும் இங்கிருந்து மொத்தமாக மிளகை அனுப்பியுள்ளார்.

    சரக்குகளை பெற்றுக் கொண்ட பின் சர்மா அதற்கான தொகை ரூ. 8 லட்சத்து 79 ஆயிரத்து 900 தர வேண்டியிருந்தது. ஆனால் பணத்தை தராமல் சர்மா காலம் கடத்தி வந்தார். மேலும் உரிய பதிலும் அளிக்கவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருணாசலம், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×