என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
7 பேர் விடுதலை விஷயத்தில் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது- கே.எஸ்.அழகிரி
Byமாலை மலர்9 May 2019 9:57 AM GMT (Updated: 9 May 2019 9:57 AM GMT)
7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். #Congress #KSAlagiri
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தியோடு மறைந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 7 பேரையும் விடுதலை செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். எனவே, இந்த விவகாரம் மீண்டும் ஆளுநரிடமே சென்றுள்ளது.
ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டோம் என கட்சி தலைமை ஏற்கனவே சொல்லிவிட்டது, எது நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும் என்றும் அழகிரி கூறினார்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தியோடு மறைந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 7 பேரையும் விடுதலை செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். எனவே, இந்த விவகாரம் மீண்டும் ஆளுநரிடமே சென்றுள்ளது.
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தன் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
இந்த தீர்ப்பு குறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது, 7 பேர் விடுதலை விவகாரத்தில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார்.
ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டோம் என கட்சி தலைமை ஏற்கனவே சொல்லிவிட்டது, எது நடந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும் என்றும் அழகிரி கூறினார்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X