search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை நிறுத்த போராட்டத்தால் திருவாரூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.
    X
    வேலை நிறுத்த போராட்டத்தால் திருவாரூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.

    திருவாரூர் மாவட்டத்தில் 3,200 லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3200 லாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. #LorryStrikes
    திருவாரூர்:

    திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், குடவாசல், ஆலங்குடி உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ஓடும் சுமார் 3200 லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருவாரூர், நீடாமங்கலம், பேரளம் ஆகிய ரெயில் நிலையங்களுக்கும் ஏற்றிச் சென்று வருகின்றன.

    இந்த நடைமுறையை மாற்றி அரவை பணிகளுக்காக ஏற்றப்படும் லோடுகளை மில் உரிமையாளர்களே தங்களது லாரிகள் மூலம் ஏற்றிச் செல்ல நுகர்பொருள் வாணிபக் கழகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இதனை தட்டிக்கேட்கும் லாரி உரிமையாளர்கள் மீது வழக்கு போட்டும் மில் உரிமையாளர்கள் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரவை பணிகளுக்காக லோடுகளை மில் உரிமையாளர்கள் ஏற்றிக் கொள்ள அனுமதித்து இருப்பதால் லாரி தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, அரவை பணிக்காக எடுத்துச் செல்வதற்கு, மில் உரிமையாளர்களின் லாரிகளில் மட்டுமே லோடுகள் ஏற்றப்படும் என்ற நடைமுறையை கண்டித்து, இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

    இதனால் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3200 லாரிகள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrikes

    Next Story
    ×