search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    23-ந்தேதிக்கு பிறகு தினகரன் தலைமையில் அமமுக ஆட்சி அமையும்: தங்க தமிழ்ச்செல்வன்
    X

    23-ந்தேதிக்கு பிறகு தினகரன் தலைமையில் அமமுக ஆட்சி அமையும்: தங்க தமிழ்ச்செல்வன்

    வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அ.ம.மு.க. ஆட்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைக்கப்படும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #AMMK #Thangatamilselvan
    திருப்பரங்குன்றம்:

    அ.ம.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாரணாசியில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தபோது வாக்கு எந்திரம் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதோ என்று சந்தேகித்து கேள்வி எழுப்பினோம்.

    தற்போது தேனியில் 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திருப்பது குறித்து கலெக்டர், இது இயல்பான நிகழ்வு மட்டுமே என்று கூறியதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு வருகிறோம்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அமைந்த ஜானகி அம்மாளின் ஆட்சியை கலைத்தனர்.

    தற்போது எடப்பாடி ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து கட்சியினரும் கரம் நீட்டுவது இயல்பானது.

    இதனை கூட்டணி சேர்ந்து இருப்பது என்று கூறுவது தவறு. கலகத்தில் பிறப்பதுதான் நீதி. கலங்காதே... மயங்காதே... என்று எம்.ஜி.ஆரே கூறியுள்ளார்.

    சாமானியர்கள் முதற்கொண்டு இதுவரையில் எங்களிடம் ஆர்வமாக 22 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி கலைக்கப்படுமாயின் நிச்சயமாக பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்களித்து இருப்போம் என்று உற்சாகமாக தெரிவித்து வருகின்றனர்.

    வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆட்சி கலைக்கப்படும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அ.ம.மு.க. ஆட்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைக்கப்படும்.

    எடப்பாடி பழனிசாமி அரசு 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததும் நிச்சயமாக மெஜாரிட்டியை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்படும். அப்போது ஆட்சியை கலைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், உதிரிக் கட்சிகளும் இயல்பாகவே கை கொடுப்பது தான் நிதர்சனமான உண்மை. அதற்கு கூட்டணி என்ற பெயர் இல்லை.

    ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. மிக மோசமான நிர்வாகம் மற்றும் பா.ஜ.க.வின் அடிமையாகவே செயல்பட்டு வருகின்றன. வருகிற 23-ந் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்.

    23-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு 22 தொகுதிகளிலும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தோற்ற பின் நம்பிக்கை தீர்மானம் ஆளுநரிடம் கூற வேண்டும். யாராக இருப்பினும் எங்களது நிலைப்பாடு, எடப்பாடி தலைமைக்கு எதிரானதாக இருக்கும்.

    அ.தி.மு.க. 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஆட்சியை தொடரட்டும். ஆனால் எப்படி 22 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது?

    அ.தி.மு.க.வின் சகாப்தம் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பே இல்லை.

    அண்ணா பாதையில் மறப்போம் மன்னிப்போம் என்ற நிலை இருந்தால் மக்கள் ஒரு நாள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் மறக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #AMMK #Thangatamilselvan
    Next Story
    ×