search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடவள்ளி அருகே காதல் தோல்வியால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
    X

    வடவள்ளி அருகே காதல் தோல்வியால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

    வடவள்ளி அருகே காதல் தோல்வியால் மனவேதனை அடைந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடவள்ளி:

    கோவை மாதம்பட்டி தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவரது மகள் தேவி (18). இவர் சென்னனூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றவர். கல்லூரி செல்ல தயாராக இருந்து வந்தார். தேவியும், அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்ததாக பெற்றோருக்கு தெரியவந்ததும் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடலை மீட்டபோது தேவி எழுதிய கடிதம் சிக்கியது. அதில் நாங்கள் காதலித்தோம். எதிர்ப்பு கிளம்பியதும் என்னை தூக்கி எறிந்து விட்டு வேறு பெண்ணை காதலித்து வருகிறான். இதனால் நான் ஏமாற்றப்பட்டேன். என் நிலை யாருக்கும் வரக்கூடாது. தற்கொலை செய்யும் அளவுக்கு என்னை கொண்டு வந்து விட்டான் என்று எழுதியிருந்தார்.

    இது குறித்து தேவியின் தந்தை பேரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×