search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சு விரட்டு- 13 பேர் மீது வழக்கு
    X

    திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி மஞ்சு விரட்டு- 13 பேர் மீது வழக்கு

    திருப்பத்தூர் அருகே கீழையபட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே கீழையபட்டி கிராமத்திலுள்ள விநாயகர் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் கீழையபட்டி, ஊர்குளத்தான்பட்டி, கொரட்டி, மருதங்குடி, என்.மேலையூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 250-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை கீழையபட்டி பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் வயல்காட்டுப்பொட்டலில் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கூறி சிராவயல் கிராம நிர்வாக அதிகாரி நல்லழகு கொடுத்த புகாரின் பேரில், கீழையபட்டியைச்சேர்ந்த சேவுகன்(75), நாகராஜன்(45), கண்ணன்(55), ஆறுமுகம் மகன் நாகராஜன்(45), தேனப்பன்(45) ஆகிய 5 பேர் மீதும், மேலும் இதே போன்று அரசு அனுமதியின்றி கண்மாயில் மஞ்சுவிரட்டு மாடுகளை அவிழ்த்து விட்டதாக கூறி அருகில் உள்ள ஊர்களைச்சேர்ந்த செந்தில் (24), சிவா(47), நாச்சியப்பன்(62), கண்ணுச்சாமி(54), பாஸ்கரன், விவேக், பாண்டி (20), பிரகாஷ்(25) ஆகிய 8 பேர் மீதும் மொத்தம் 13 பேர் நாச்சியாபுரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
    Next Story
    ×