search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை
    X

    கோவை அருகே தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தாய் இறந்த துக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கோவை:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் எலப்பாழ தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (47). கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவரது தாய் கற்பகம் தான் இவரை கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கற்பகம் இறந்தார். இதனால் மனோகரன் மனவேதனையில் இருந்தார். தாய் இறந்த துக்கத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் பேலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனோகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை இருகூர் அய்யர் தோட்டத்தில் கிணறு உள்ளது. மொத்தம் 70 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 30 அடி தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் 35 வயது மதிக்க தக்க ஆண் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பிணமாக கிடந்தவர் உடலை மீட்டனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கிணற்றில் தள்ளி விட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனைமலை அருகே உள்ள கரியதொட்டி பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் நாலாம் மூலை சுங்கம் எம்.ஜி.ஆர். நகரில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். அங்கு கட்டிட பணி நடைபெறுவதால் கருப்பசாமி ஒர்க்‌ஷாப்பை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். நேற்று ஒர்க்‌ஷாப் சென்று பார்த்த போது அங்கு 45 வயது மதிக்க தக்க ஆண் பிணமாக கிடந்தார்.

    அவர் டவுசர் மட்டுமே அணிந்து இருந்தார். இது குறித்து ஆழியாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×