search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    பழனி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

    பழனி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள கருப்பணகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சங்கர். இவர் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி வெண்ணிலா (வயது 26). சம்பவத்தன்று வெண்ணிலா வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார்.

    நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்பு அவர் வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். சத்தம் கேட்டு விழித்த வெண்ணிலா திருடன் திருடன் என கத்தினார். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1.20 லட்சம். இது பற்றி பழனி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×