என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்7 May 2019 9:36 AM GMT (Updated: 7 May 2019 9:36 AM GMT)
பழனி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே உள்ள கருப்பணகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சங்கர். இவர் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி வெண்ணிலா (வயது 26). சம்பவத்தன்று வெண்ணிலா வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார்.
நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தார். பின்பு அவர் வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். சத்தம் கேட்டு விழித்த வெண்ணிலா திருடன் திருடன் என கத்தினார். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1.20 லட்சம். இது பற்றி பழனி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X