என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தம் அருகே மைசூர் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு
Byமாலை மலர்6 May 2019 10:38 AM GMT (Updated: 6 May 2019 10:38 AM GMT)
குடியாத்தம் அருகே சிக்னலுக்காக நின்றுக்கொண்டிருந்த மைசூர் ரெயிலில் பெண்ணிடம் இருந்து செயின் பறித்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
பெங்களூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). இவரது சகோதரி நிர்மலா (42). ஆந்திராவில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பெங்களூருக்கு திரும்பினார். திருப்பதி-மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் சென்றார்.
குடியாத்தம் அருகே அதிகாலை சென்ற ரெயில் சிக்னலுக்காக நின்றது. அப்போது ரெயிலில் ஏறிய 4 பேர் கும்பல் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா கத்தி கூச்சலிட்டார். கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து நிர்மலா பெங்களூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். ரெயில்வே போலீசார் குடியாத்தம் பகுதியில் நகை கொள்ளை போனதால் வழக்கை ஜோலார்பேட்டை போலீசாரிடம் மாற்றம் செய்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
காட்பாடி- அரக்கோணம், காட்பாடி- சேலம், காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக வரும் ரெயில்களில் 1 சப்-இன்ஸ்பெக்டருடன் 5 பேர் கொண்ட 3 போலீஸ் குழுவினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் கொள்ளை சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவது ரெயில் பயணிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). இவரது சகோதரி நிர்மலா (42). ஆந்திராவில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பெங்களூருக்கு திரும்பினார். திருப்பதி-மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் சென்றார்.
குடியாத்தம் அருகே அதிகாலை சென்ற ரெயில் சிக்னலுக்காக நின்றது. அப்போது ரெயிலில் ஏறிய 4 பேர் கும்பல் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்மலா கத்தி கூச்சலிட்டார். கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து நிர்மலா பெங்களூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். ரெயில்வே போலீசார் குடியாத்தம் பகுதியில் நகை கொள்ளை போனதால் வழக்கை ஜோலார்பேட்டை போலீசாரிடம் மாற்றம் செய்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
காட்பாடி- அரக்கோணம், காட்பாடி- சேலம், காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக வரும் ரெயில்களில் 1 சப்-இன்ஸ்பெக்டருடன் 5 பேர் கொண்ட 3 போலீஸ் குழுவினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் கொள்ளை சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவது ரெயில் பயணிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X