என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கழுத்தை நெரித்து வாலிபர் கொலை
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம், ராஜா தெருவை சேர்ந்தவர் எல்லப்பன். இவரது மகன் பொற் செல்வன் (வயது22). இவர் ஒரகடம் அருகில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பிவரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னக்குப்பம் அருகே உள்ள வயல் வெளியில் பொற்செல்வன் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது கழுத்தில் கொலைக்கு பயன்படுத்திய டவல் இருந்தது.
இதுகுறித்து ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொற் செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொற்செல்வனை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
அவருடன் கடைசியாக சென்றவர்கள் யார்? அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் எண்ணையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்