search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு
    X

    வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு

    பெரம்பலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கணபதி நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுபாஷினி. குமார் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு பணிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் குமாரின் மனைவி நாகர்கோவிலில் உள்ள தனது தாய்வீட்டிற்கு கடந்த மாதம் ஏப்ரல் 29-ந் தேதி சென்றார். நேற்று மதியம் பெரம்பலூர் திரும்பினார். தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோவும்உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7 பவுன் நகைகள் திருடுபோயிருந்தது. உடனே இதுகுறித்து சுபாஷினி பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×