என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பத்தூர் அருகே வாலிபர் அடித்து கொலை- 3 பேர் கைது
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் பழனியப்பன். இவருக்கும், கொங்கரத்தி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (30) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு பழனியப்பன் கண்டரமாணிக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தனது நண்பர்களுடன் வந்த நாராயணன் பழனியப்பனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் கட்டையால் பழனியப்பனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பழனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணன், அவரது மைத்துனர் சந்திரசேகர், கல்லல் செல்வம் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். அருண், வெற்றி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
கொலையான பழனியப்பனின் மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்