search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியந்தோப்பில் 2 ரவுடிகள் கைது
    X

    புளியந்தோப்பில் 2 ரவுடிகள் கைது

    புளியந்தோப்பில் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ். முத்துநகரை சேர்ந்தவர் கபாலி என்கிற ராஜேஷ் (30). இதே பகுதியை சேர்ந்தவர் தம்பா என்கிற கமல் (30). போதை பொருள் விற்றதாக இவர்கள் மீது வழக்கு உள்ளது. ரவுடித் தனமும் செய்து வந்தனர்.

    ஜெயிலில் இருந்த போது இவர்களை தாக்கிய 3 பேரை கொலை செய்ய ரஜேஷ், கமல் ஆகியோர் திட்டமிட்டு கத்தி வாங்கி வந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை கமி‌ஷன் சாய்சரண் உத்தரவுப்படி, உதவி கமி‌ஷனர் விஜய் ஆனந்த் மேற்பார்வையில் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி போலீசாருடன் சென்று ரவுடிகள் ராஜேஷ், கமல் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்தி, 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×