search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்தில் நூல் பண்டல்கள் எரிந்து கிடக்கும் காட்சி.
    X
    தீ விபத்தில் நூல் பண்டல்கள் எரிந்து கிடக்கும் காட்சி.

    கூட்டுறவு நூற்பாலையில் தீ விபத்து - ரூ.50 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்து நாசம்

    புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமானது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் நூல்கள் அரசின் விலையில்லா வேஷ்டி, சேலைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சீருடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தயாரிக்கப்பட்ட நூல்கள், எந்திரங்கள் இருக்கும் அறை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதிகமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று என்று அந்த அறையிலிருந்து தீப்பிளம்பு வெளியேறியது. உடனடியாக அங்கிருந்த காவலாளி மற்றும் அதிகாரிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    நேற்று மே தினம் என்பதால் ஆலை ஓடாமல் விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில், தீ எவ்வாறு பரவியது என்று தெரியவில்லை. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். பின்னர் அவர்கள் தெரிவிக்கையில் வெப்பத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் மேலும் நூற்பாலை இயங்காத காரணத்தினால் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தது

    எனவே மின்கசிவு இதற்கு ஒரு காரணம் இல்லை என்றும் தெரிகிறது. வெப்ப அழுத்தத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது வேறு நபர்கள் சதி வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது எரிந்த நூல்களின் பாதிப்பு ரூ.50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்றும் எந்திரங்களின் நிலை என்ன என்றும் தெரியவில்லை என்று நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் முழுமையாக எவ்வளவு எடையுள்ள நூல்கள் அங்கே வைக்கப்பட்டு இருந்தது என்ற புள்ளி விபரங்கள் தெரியவில்லை. அதனை கணக்கிடும் பணி தற்போது நடந்து வருகிறது. நூல்கள் தயாரிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இருப்பிலேயே வைத்திருந்தது வெப்ப அழுத்தத்திற்கு ஒரு காரணமாக ஊழியர்களால் சொல்லப்படுகிறது.

    நூல்களை இருப்பில் வைக்காமல் உடனடியாக அனுப்பி இருந்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இருக்காது என்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தீயை அணைப்பது மட்டுமின்றி மேலும் பரவாமல் தடுப்பதற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், கீரமங்கலம் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.



    Next Story
    ×