என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காளையார்கோவில் அருகே விபத்து - சிறுமி, முதியவர் உடல் நசுங்கி பலி
Byமாலை மலர்30 April 2019 1:04 PM GMT (Updated: 30 April 2019 1:04 PM GMT)
காளையார்கோவில் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரின் மீது கார் மோதியதில் சிறுமி, முதியவர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காளையார்கோவில்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 50). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபீதா என்ற மனைவியும், நசீன் பாத்திமா (14) என்ற மகளும் உள்ளனர்.
வெளிநாட்டில் இருந்த இஸ்மாயில் நேற்று விமானம் மூலம் ஊருக்கு புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவரை அழைத்து வருவதற்காக சபீதா, தனது மகள் நசீன் பாத்திமா, உறவினர் ராஜா முகமது (60) ஆகியோருடன் காரில் நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டார். காரை பரமக்குடியைச் சேர்ந்த செல்வம் (37) என்பவர் ஓட்டினார்.
விமானத்தில் வந்து இறங்கிய இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் ஊருக்கு காரில் புறப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்துள்ள புல்லுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் கார் நொறுங்கியது. உள்ளே இருந்தவர்கள் படுகாயம் அடைந்து கூக்குரலிட்டனர். இந் விபத்தில் நசீன் பாத்திமா, ராஜா முகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இஸ்மாயில், சபீதா, டிரைவர் செல்வம் ஆகியோரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 50). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபீதா என்ற மனைவியும், நசீன் பாத்திமா (14) என்ற மகளும் உள்ளனர்.
வெளிநாட்டில் இருந்த இஸ்மாயில் நேற்று விமானம் மூலம் ஊருக்கு புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவரை அழைத்து வருவதற்காக சபீதா, தனது மகள் நசீன் பாத்திமா, உறவினர் ராஜா முகமது (60) ஆகியோருடன் காரில் நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டார். காரை பரமக்குடியைச் சேர்ந்த செல்வம் (37) என்பவர் ஓட்டினார்.
விமானத்தில் வந்து இறங்கிய இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் ஊருக்கு காரில் புறப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்துள்ள புல்லுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் கார் நொறுங்கியது. உள்ளே இருந்தவர்கள் படுகாயம் அடைந்து கூக்குரலிட்டனர். இந் விபத்தில் நசீன் பாத்திமா, ராஜா முகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இஸ்மாயில், சபீதா, டிரைவர் செல்வம் ஆகியோரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X