search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம் - மாற்றப்பட்ட முன்னாள் ஆட்சியர் ஐகோர்ட்டில் முறையீடு
    X

    வாக்கு மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம் - மாற்றப்பட்ட முன்னாள் ஆட்சியர் ஐகோர்ட்டில் முறையீடு

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் தன்னை மாற்றியது தொடர்பாக, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். #HighCourt #EC #MaduraiConstituency
    சென்னை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

    இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணையின்போது, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இதற்கிடையே, வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மற்றும் துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரையும் மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரத்தில் தன்னை மாற்றியது தொடர்பாக, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் நடராஜன் ஐகோர்ட்டில் இன்று மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், தனது விளக்கத்தை கேட்காமல் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். #HighCourt #EC #MaduraiConstituency
    Next Story
    ×